Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்! தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்! தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்!
முதல் பக்கம் » 64 திருவிளையாடல்
கீரனைக் கரையேற்றிய படலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 மார்
2011
02:03

சுந்தரரின் கோபத்தால் பொற்றாமரைக் குளத்தில் மூழ்கினார் நக்கீரன். வந்தது ஈசன் என்பதை உணர்ந்த செண்பக பாண்டியன், உணர்ச்சியும் சோகமும் மேலிட நக்கீரரை மீண்டும் பெறும் பொருட்டு கோயில் நோக்கி ஓடினான். மற்ற புலவர்களும் தொடர்ந்து ஓடிச் சென்று, இறைவனிடம் மீண்டும் நக்கீரரை சங்கத்திற்கு தந்தருள கண்ணீருடன் வேண்டினர். இறைவனும் ரிஷபத்தில் தோன்றி, நக்கீரரை பொற்றாமரை  குளத்தில் இருந்து வெளிவரச் செய்தார். முன்பு நக்கீரரை அழற் கண்ணால் நோக்கிய சோமசுந்தரக் கடவுள் இப்போது அருட்கண்ணால் நோக்கியருளினார். அன்னை உமையவளின் கூந்தலுக்கு இயற்கை மணமில்லை என்று சொன்னதற்காக வருத்தம் தெரிவித்தார். திருக்காளத்தியர் மீது நேரிசை வெண்பாவினால் கயிலை பாதி, காளத்தி பாதி என்னும் அந்தாதியைப் பாடினார். கவிதாஞ்சலி செய்தார். அந்த அந்தாதியைத் திருச் செவிமடுத்து, நேரில் வந்து நக்கீரனுடைய கையைப் பிடித்து கரையின் கண் ஏற்றினார் எம்பெருமான். இறைவனின் கோபத்தைப் பெற்ற பாக்கியம் அடைந்த அவர், அதைப் பிரசாதமாகக் கருதி கோபப்பிரசாதம் என்னும் பாமாலை பாடினார். நக்கீரன் கருணைக் கடலாகிய சோம சுந்தரக் கடவுளையும், மீனாட்சியம்மையாரையும் வணங்கினான். தீமை செய்தோருக்கும் நன்மை செய்ததைப் பொளுõகச் செய்யுளில் அமைத்துக் கை கொடுத்து கயிலை வாசனை ஏற்றிப் போற்றினான். சோமசுந்தரக் கடவுள் நக்கீரனுக்குத் திருவருள் கனிந்து முன் போலவே நன்கு புலவர் கூட்டத்தில் இருக்கக் கடவாய்! என்று அருளி மீனாட்சியம்மையோடு மறைந்து திருக்கோயிலினுள் வீற்றிருந்தார். தருமிக்கு பொற்கிழி பரிசு வழங்கப்பட்டதுடன், பலவித சலுகைகளையும் மன்னன் அளித்தான். தமிழுக்காக குரல் கொடுத்த நக்கீரரின் இலக்கண அறிவை மேலும் பலப் படுத்த எண்ணினார் இறைவன்.

 
மேலும் 64 திருவிளையாடல் »
பெரிய தர்மம் செய்தால் தான் இறை ஆசி கிடைக்கும் என்பதில்லை. சிறிய தொண்டு கூட கருணையைப் பெற்றுத் தரும். ... மேலும்
 
temple news
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்
 
temple news
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்
 
temple news
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்
 
temple news
குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar