Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சங்கத்தார் கலகம் தீர்த்த படலம்! கீரனைக் கரையேற்றிய படலம்! கீரனைக் கரையேற்றிய படலம்!
முதல் பக்கம் » 64 திருவிளையாடல்
கீரனுக்கு இலக்கணம் உபதேசித்த படலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 மார்
2011
02:03

பரமேஸ்வரன் பார்வதியிடம்,தேவி! நம் பிள்ளை நக்கீரன் என்னையே எதிர்த்து வாதாடியதைக் கவனித்தாயா! அவனது தமிழ்ப்பணி வியப்பிற்குரியது. அவனுக்கு இலக்கணம் கற்றுத்தந்தால், தமிழை இன்னும் அவன் வளப்படுத்துவான். ஆனால், அவனுக்கு இலக்கணத்தைக் கற்றுக் கொடுக்க யார் இருக்கிறார்கள்? அப்படி ஒரு நபரைத் தேர்வு செய்ய வேண்டும். என்ன செய்யலாம்? நீயே ஒரு யோசனை சொல்லேன்! என்றார். பார்வதிதேவி அதற்கு விடை சொன்னாள். நாதா! இதைக்கேட்டதும் எனக்கு நமது திருமணநாள் நினைவுக்கு வருகிறது. அன்றைய தினம் தேவாதி தேவர்களெல்லாம் நம் திருமணத்தைக் காண வந்ததால் வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. எனவே உலகை சமநிலைப்படுத்த அகஸ்திய முனிவரையும், அவரது மனைவி லோபமுத்திரையையும் தெற்கே அனுப்பினீர்கள். அப்போது, நீங்கள் அகத்தியருக்கு இலக்கணம் கற்பித்தீர்கள். அவரை அனுப்பி நக்கீரனுக்கு இலக்கணம் கற்றுக்கொடுங்கள், என்றாள். பக்தனுக்கு ஒரு நியாயமான விஷயம் நடக்க வேண்டுமானால், முதலில் அம்மன் சன்னதிக்கு செல்ல வேண்டும். அங்கே போய் விஷயத்தைச் சொல்லிவிட்டு, சுவாமி சன்னதிக்கு வந்தால் அதற்குள் அம்மா விஷயத்தை தந்தையிடம் போட்டு விடுவாள். பக்தன் சுவாமி சன்னதிக்கு வந்து, சுவாமியிடம் விஷயத்தை மீண்டும் சொல்லிவிட்டு வீடு திரும்புவான். அம்மாவின் சிபாரிசாயிற்றே! நடக்காமல் இருக்குமா! இவன் வீடு திரும்புவதற்குள் கோரிக்கைக்குரிய பலனோ, அதை செயல்படுத்துவதற்குரிய பாதையோ கிடைத்து விடும்.

சில பிள்ளைகள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் எந்தக் கோரிக்கையையும் இறைவனிடம் வைப்பதில்லை. ஆனால், கடமையைச் சரிவர நேரத்துக்கு எவ்வித தயக்கமும் இன்றி வேகமாக முடித்து விடுவார்கள். அவர்களுக்குரிய பலனை ஆண்டவன் சற்று தாமதித்தாலும், மொத்தமாக கொடுத்து விடுவான். நக்கீரர் இரண்டாம் ரகம். இறைவன் எழுதிய பாட்டு என தெரிந்தபிறகும், அதில் தவறுள்ளது என வாதிட்டு பின்வாங்காமல் நின்றார். இறைவனுக்கு இந்த மனஉறுதி பிடித்துவிட்டது. மனஉறுதியுள்ளவனே உலகில் எதையும் சாதிக்க முடியும். அவனைத் தேடி ஆண்டவன் பரிசை அனுப்பி விடுவான். அத்தகைய பரிசுதான் நக்கீரருக்கு இப்போது கிடைக்கப் போகிறது. அகத்தியரை பார்வதிதேவி நினைவுபடுத்தியதும், அகத்தியரை வரவழைத்தார் சிவன். அகத்தியர் அவரை வணங்கி,சர்வலோக காவலரே! இந்த எளியவனை எதற்காக வரச்சொன்னீர்கள்? என்றார். அகத்தியரே! நான் உமக்கு போதித்த இலக்கணத்தை, நீர் நக்கீரனுக்கு உபதேசிக்க வேண்டும், என்றார். இந்த உத்தரவை ஏற்ற அகத்தியர். தன் மனைவியுடன் மதுரை நகரை அடைந்தார். சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று பொற்றாமரை குளத்தில் நீராடினார். எத்தகைய துன்பத்தையும் போக்கும் தீர்த்தம் அது. தனக்கு இலக்கணம் கற்பிக்க அகத்தியர் வந்துள்ளதை அறிந்த நக்கீரர் ஓடோடி வந்து அவரது திருப்பாதங்களைப் பணிந்து இலக்கணத்தைக் கற்றார். மற்ற புலவர்களுக்கும் கற்றுக்கொடுக்க அனுமதி பெற்றார். ஒருவன் தனக்கு தெரிந்த நல்ல விஷயத்தை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது இந்த இடத்தில் தெளிவாகிறது.

 
மேலும் 64 திருவிளையாடல் »
பெரிய தர்மம் செய்தால் தான் இறை ஆசி கிடைக்கும் என்பதில்லை. சிறிய தொண்டு கூட கருணையைப் பெற்றுத் தரும். ... மேலும்
 
temple news
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் ... மேலும்
 
temple news
இந்திரனின் வாகனமான ஐராவதம் அவனுக்காக காத்து நின்றது. கருடனால் பாம்பை பிடிக்க முடியும்... ஆனால், அது ... மேலும்
 
temple news
மதுரை மாநகரம் இயற்கையாக எழுந்ததல்ல. அது உருவாக்கப்பட்ட ஒரு நகரம். அதை உருவாக்கி அருளியவரும் ஆலவாய் ... மேலும்
 
temple news
குலசேகர பாண்டியன் மதுரை நகரை நிர்மாணித்ததன் பலனாக அழகான மகனையும் பெற்றான். அவனுக்கு மலையத்துவஜன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar