திண்டுக்கல்: ஜெருசலேமில் தங்கியிருந்த இயேசு, யூதர் குல வீரர்களிடம் பிடிபடுவதற்கு முன், இறுதி இரவு விருந்திற்கு ஏற்பாடு செய்தார். எளிமை மற்றும் கீழ்படிதலை சீடர்களுக்கு உணர்த்துவதற்காக, அவர்களின் பாதங்களை தண்ணீரால் கழுவி, துணியால் துடைத்து முத்தமிட்டார். இதன் பின்னர், தனது நினைவாக திருப்பலியை உருவாக்கி, குருக்களாக சீடர்களை திருநிலைப்படுத்தினார். இதை நினைவு கூறும் புனித வியாழன் நிகழ்ச்சி நேற்று சர்ச்சுகளில் கடைபிடிக்கப்பட்டது. திண்டுக்கல், புனித வளனார் சர்ச்சில் நடந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் எளியவர்கள் 12 பேரின் பாதங்களை, ஆயர் அந்தோணி பாப்புச்சாமி கழுவி, துணியால் துடைத்து முத்தமிட்டார். சிறப்பு திருப்பலிக்கு பின், இரவு முழுவதும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.