பதிவு செய்த நாள்
17
டிச
2014
11:12
புதுச்சேரி: சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, மொரட்டாண்டியிலுள்ள 27 அடி உயர சனீஸ்வர பகவானுக்கு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 6.00 மணிக்கு, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை நடந்தது. சனிப்பெயர்ச்சி விழாவான நேற்று சிதம்பர குருக்கள் தலைமையில், மகா கும்ப தீபம் ஏற்றப்பட்டது. சனீஸ்வர பகவானுக்கு, காலை 6.௦௦ மணிக்கு, 1008 லிட்டர் பால் அபிஷேகமும், ௧0.௦௦ மணிக்கு, 1008 லிட்டர் நல்லெண்ணெய் அபிஷேகமும், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, சிதம்பர குருக்கள், கீதாசங்கர குருக்கள், கீதாராம் குருக்கள் ஆகியோர் செய்தனர்.