Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் 18 படிகளை புதுப்பிக்க ... சபரிமலையில் ஜன.,14ம் தேதி மகரஜோதி பெருவிழா! சபரிமலையில் ஜன.,14ம் தேதி மகரஜோதி ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் தினமும் 40 ஆயிரம் ’டின் ’ அரவணை தயாரிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 டிச
2014
11:12

சபரிமலை : ’தினமும் 40 ஆயிரம் டின் அரவணை தயாரிக்க தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் பக்தர்களுக்கு கூடுதல் அரவணை வழங்கப்படும்,” என கேரள மாநில தேவசம்போர்டு அமைச்சர் சிவகுமார் கூறினார். சன்னிதானத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் அமைச்சர் கூறியதாவது:பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும்போது ஏற்படும் சிரமங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் வயர்லெஸ் மூலம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் பக்தர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்யப்பட்டுள்ளது. பம்பை மற்றும் சன்னிதானத்தில் 1.5 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருதய நோய் பாதிப்புடன் வந்த138 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். மண்டல பூஜை பாதுகாப்புக்காக 2150 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அரவணை தயாரிப்பில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக சபரிமலை ஒருங்கிணைப்பாளர் ஜோதிலால் ஆய்வு செய்துள்ளார். உணவு தரக்கட்டுப்பாடு அதிகாரிகள் கூறியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் அரவணை உற்பத்தியை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தற்காலிக அடுப்புகள் அமைத்து தினமும் 40 ஆயிரம் டின் அரவணை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஒரு பக்தருக்கு ஐந்து டின் அரவணை வழங்கப்படும். மகரவிளக்கு காலத்தில் அரவணை விநியோகத்தில் உள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.மகரவிளக்குக்கு முன் முதல்வர் உம்மன்சாண்டி தலைமையில் மீண்டும் ஒரு ஆலோனை கூட்டம் நடைபெறும். சன்னிதானத்தில் கழிவு நீரை சுத்திகரிக்கும் திட்டம் வரும் மார்ச் மாதம் திறக்கப்படும். பம்பையில் அடுத்த சீசனுக்கு முன் மேலும் ஒரு சுத்திகரிப்பு திட்டம் அமைக்கப்படும். பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு ’ரோப்வே’ அமைக்க ரூ.15 கோடி செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டு கோல்கட்டா கம்பெனிக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் சபரிமலைக்காக மாநில அரசு ரூ. 425 கோடி செலவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தேவசம்போர்டு தலைவர் கோவிந்தன்நாயர், நிர்வாக அதிகாரி ஜெயக்குமார், பி.ஆர்.ஓ., முரளி உடனிருந்தனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar