திருப்பூர்: திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் பக்தர்கள், நேற்று அக்கினிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் தங்க காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.