பதிவு செய்த நாள்
15
ஏப்
2015
02:04
எதிலும் முதன்மையை விரும்பும் மேஷ ராசி அன்பர்களே!
ராகு உங்கள் ராசிக்கு 6 ல் அமர்ந்து நன்மை தருவார். சுக்கிரன் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். செவ்வாய் சாதகமற்று இருந்தாலும், ராசி நாதன் என்பதால் பிரச்னை வராது. சுக்கிரனால் பணவரவு பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த கணவன், மனைவி ஒன்று சேருவர். புதுமண தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். ஏப். 30 மே 1,2-ல் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மே 3 வரை அரசின் சலுகை கிடைக்கும்.
பணியாளர்களுக்கு அலைச்சல், வேலைப்பளு இருந்தாலும், ஆதாயத்திற்கு குறைவிருக்காது. மே 3 க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்கள் வேலையில் கவனமுடன் இருக்கவும். ஏப்.14, மே 10,11ல் சிறப்பான நாட்களாக இருக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். பெண்களால் பொன், பொருள் சேரும். மே 3-ந் தேதிக்குள் அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள், பிரதிபலன் பாராமல் உழைக்க வேண்டியிருக்கும்.
மாணவர்கள் கூடுதல் கவனமுடன் படிப்பது அவசியம்.
விவசாயிகள் சோளம், எள்,கரும்பு மற்றும் பழ வகைகள் நல்ல மகசூலை தரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்களால் குடும்ப நலன் சிறக்கும்.பிள்ளைகளால் பெருமை காணலாம். ஏப். 23,24 மே 3,4ல் புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும். புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம்.
நல்ல நாள்: ஏப். 14, 15, 16, 19, 20, 23, 24, 30 மே 1, 2, 3, 4, 10, 11, 12, 13.
கவன நாள்: மே 5, 6, 7 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 5, 7 நிறம்: நீலம்,வெள்ளை
பரிகாரம்: புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து பாசி பயறு தானம் செய்யலாம். தினமும் சூரியனை வணங்குங்கள். செவ்வாயன்று முருகனை வழிபடுங்கள்.