பதிவு செய்த நாள்
18
ஏப்
2015
11:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் கோயிலின் வடக்காடி வீதியில் ஏப்.,30 காலை 9 முதல் காலை 9.30 மணிக்குள் நடக்கிறது. இதற்கான கட்டண நுழைவு டிக்கெட் முன்பதிவு ஏப்.,21ல் துவங்குகிறது.தெற்கு கோபுரம் வழியாக 6,000 பக்தர்கள் கட்டணமில்லா தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். திருக்கல்யாண கட்டண (ரூ.500, ரூ.200) நுழைவு டிக்கெட் முன்பதிவு ஏப்.,21 முதல் ஏப்.,25 வரை நடக்கிறது. www.maduraimeenakshi.org என்ற இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம். பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஒன்றுடன், அலைபேசி எண், மின் அஞ்சல் முகவரியை தெரிவித்து முன்பதிவு செய்யலாம். கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால் கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம்,பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.