Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை ... கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்! கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் அருகே பழமையான அய்யனார் சிலை கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:
திருப்பூர் அருகே பழமையான அய்யனார் சிலை கண்டுபிடிப்பு!

பதிவு செய்த நாள்

05 மே
2015
11:05

திருப்பூர் : திருப்பூர் அருகே, ஆயிரம் ஆண்டு பழமையான அய்யனார் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர், கண்டியன்கோவில், கோவில்பாளையம் கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வணிகப்பெரு வழியருகே வழிபாட்டில் உள்ள ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய, இரண்டு அய்யனார் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வு மைய தொல்லியல் ஆய்வாளர் ரவிக்குமார் கூறியதாவது: தமிழகத்தின் பண்டைய வணிக பெருவழிகளில் முக்கியமானது, ராசகேசரி பெருவழி. இதில், கோவில்பாளையம், கண்டியன் கோவிலில் இரு சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 100 செ.மீ., உயரம்; 95 செ.மீ., அகலம்; 35 செ.மீ., கணம் உள்ள இரண்டு சிற்பங்கள் காணப்படுகின்றன.சங்க காலத்தில் சாத்தன் எனவும், சோழர் காலத்தில் இருந்து அய்யனார் எனவும், குறிப்பிடப்படுகிறது. கோவில்பாளையம் அய்யனார், பீடத்தின் மீது, வலது காலை மடித்தும், இடது காலை குத்திட்டு, அதன் மீது இடது கையை வைத்தபடியும், வலது கையில் செண்டு (ஆயுதம்) பிடித்தபடி, மகாராஜ லீலாசனத்தில் உள்ளார்.கண்டியன் என்பது, ருத்திராட்ச மாலை அணிந்த சிவபெருமானை குறிக்கிறது; இக்கிராமம் கண்டியன் கோவில் என பெயர் பெற்றது. இங்குள்ள அய்யனார், வலது கையில் அபயஹஸ்தம் முத்திரை காட்டி அருள்பாலிக்கும் நிலையிலும், தலையின் இருபுறமும் திரிசடை, சுருள்சடை அடர்த்தியாகவும், அழுத்தமாகவும் தொங்கி அமைந்த ஜடாபாரம் கோலத்தில் உள்ளார்.அய்யனார் பீடத்தில் அமர்ந்த நிலையில் பூரணை, புஷ்பகலை என்ற இரு மனைவியர் உள்ளனர். பெண்கள் சாமரம் வீசிக்கொண்டுள்ளனர். பீடத்தின் கீழ் நாயும், பன்றியும் விளையாட, வலதுபுரம் அய்யனாரின் வாகனமான யானை உள்ளது. இந்த அமைப்பு முறையை ஆய்வு செய்தபோது, பிற்கால சோழர் காலத்தை சார்ந்த சிற்பங்கள் என அறிய முடிகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவிலில், தீமிதி உற்சவத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை கோதண்டராமர் ஸ்வாமி கோயில் ராமநவமி பிரமோற்சவ விழா கடந்த 17 ந்தேதி காலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar