ஊத்துக்கோட்டை:கன்னிகாபுரம் ஏகாத்தம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.வாணியஞ்சத்திரம் அடுத்த, கன்னிகாபுரம் கிராமத்தில் உள்ளது ஏகாத்தம்மன் கோவில். இக்கோவில், சிதிலமடைந்து காணப்பட்டது. கிராமவாசிகள் பங்களிப்புடன் கோவில் சீரமைக்கப்பட்டு, நேற்று காலை, கும்பாபிஷேகம் நடந்தது. இதை ஒட்டி, கடந்த 24ம் தேதி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும், கணபதி பூஜை, வாஸ்து சாந்தி, நான்கு கால யாக பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது.கிராமத்தில் உள்ள பெண்கள் அம்மனுக்கு கூழ்ஊற்றி வழிபட்டனர். நேற்று காலை, 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மாலை, கிராமத்தில் உள்ள பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.