Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி.,வடபத்ரசயனர் சன்னதியில் ... பாலீஸ்வரர் கோவிலில் குருவார பிரதோஷம்: 108 லிட்டர் பாலாபிஷேகம்! பாலீஸ்வரர் கோவிலில் குருவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை ஓணம் பண்டிகை: கேரளாவில் உற்சாகம்!
எழுத்தின் அளவு:
நாளை ஓணம் பண்டிகை: கேரளாவில் உற்சாகம்!

பதிவு செய்த நாள்

27 ஆக
2015
10:08

பாலக்காடு: கேரள மக்கள், நாளை, ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர்; இதையொட்டி, கேரளாவில், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம், நாளை, 28ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இன்று முதல், நான்கு நாட்களுக்கு, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உத்திராட நட்சத்திர நாளான இன்று, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பாலக்காட்டில், அரசு சார்பு நிகழ்ச்சிகளை, இன்று மாலை, 5:30 மணிக்கு, வனத்துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார். தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.அட்டப்பாடி மற்றும் மலம்புழா பூங்காவில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இன்று காலை, டவுன் ஹாலில், பூக்கோல போட்டி நடக்கிறது.கேரள அரசு கட்டடங்கள், கோவில்கள், முக்கிய பகுதிகள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஜொலிக்கின்றன. திருச்சூர் மாநகராட்சியில், 31ம் தேதி புலியாட்டம் நடக்கிறது. திருச்சூர் மாநகராட்சி பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, ஏராளமானோர், புலி, சிறுத்தை வேடமிட்டு, மேள தாளம் முழங்க, வீதியுலா வர உள்ளனர்.அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடைபெற உள்ளது. புலி ஆட்டத்தை பார்க்க, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா மாநிலங்களில் இருந்து, அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவர் என்பதால், சிறப்பு பஸ்களை இயக்க, கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

5 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை: தமிழகத்தில், சென்னை, கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மலையாளிகள் அதிகளவில் வசிக்கின்றனர். இவர்கள், ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக, உள்ளூர் விடுமுறை அறிவித்து, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை; உடுமலையில் பிரசித்தி மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஓம் சகதி பராசக்தி ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வண்டியூர் தேனுார் மண்டபத்தில் நேற்று மண்டூக முனிவருக்கு கருட வாகனத்தில் சாப ... மேலும்
 
temple news
xதஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் நிலாச்சோறு ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை அரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை ஒட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar