பதிவு செய்த நாள்
27
ஆக
2015
11:08
புதுடில்லி: அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு, தீப்பிடிக்காத மேற்கூரை அமைக்கும் பணி, ரூர்க்கி நகர, இந்திய தொழில்நுட்ப கழகத்திடம் - ஐ.ஐ.டி., ஒப்படைக்கப்பட்டுள்ளது. உ.பி., மாநிலத்தில், சமாஜ்வாதி கட்சியின், அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கே, அயோத்தியில் உள்ள, ராம ஜென்ம பூமியில், தற்காலிகமாக ஒரு கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு தீப்பிடிக்காத மேற்கூரை அமைக்கும் பணி, ரூர்க்கி, ஐ.ஐ.டி.,யிடம் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பைசாபாத் ஆணையர் சூர்ய பிரகாஷ் மிஸ்ரா கூறியதாவது: ராமர் கோவிலின் மேற்கூரை மிகவும் சேதமடைந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி, கோவிலுக்கு தீப்பிடிக்காத மேற்கூரை அமைப்பதற்காக, ரூர்க்கி ஐ.ஐ.டி.,க்கு, 11.4 லட்சம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது.