நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் ÷ காவிலில் ஆனந்த காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. காலபைரவரை தேய்பிறை அஷ்டமியில் வணங்கினால் கஷ்டங்கள் நீங்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர் போன்ற 18 வகை பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.