பதிவு செய்த நாள்
05
பிப்
2016
11:02
தஞ்சாவூர்: மகாமகம் விழா பாதுகாப்பு பணிக்காக, 3,000 ரயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பயணிகளின் வசதிக்காக, 20 சிறப்பு டிக்கெட் வழங்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரசித்தி பெற்ற மகாமகம் விழா, வரும், 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மகாமகம் குளத்திற்கு அருகே, ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளதால், 50 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள், ரயில் மூலம் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று, கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தென் மத்திய ரயில்வே ஐ.ஜி., சிங் மற்றும் தென்னக ரயில்வே ஐ.ஜி., பாரி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின், தென் மத்திய ஐ.ஜி., சிங், நிருபர்களிடம் கூறியதாவது:மகாமகம் விழாவையொட்டி, பாதுகாப்பு பணிகளில், 3,000 ரயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பயணிகளின் வசதிக்காக, 20 சிறப்பு டிக்கெட் வழங்கும் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், நடைமேடை - 2 மற்றும் நடைமேடை - 3 ஆகியவற்றில், 20 கழிப்பறைகள் அமைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.