பதிவு செய்த நாள்
05
பிப்
2016
11:02
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவிலின், 13ம் ஆண்டு விழா, நேற்று, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகையில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலின், 13ம் ஆண்டு விழா, நேற்று, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், நவகிரக பூஜை, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:00 மணி முதல், 9:00 மணி வரை பார்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று, அதிகாலை, 5:00 மணிக்கு, ருத்ர ஹோமம், துர்க சுத்த ஹோமம் நடைபெறுகிறது. காலை, 8:00 மணிக்கு கணபதி மற்றும் சாயிநாத பரிவார மூர்த்திகள் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. மதியம், 12:00 மணிக்கு மூலவர் சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனையும், இரவு, 7:30 மணிக்கு உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.