பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
உளுந்துார்பேட்டை: திருவெண்ணைநல்லுார், மெய்கண்டார் கோவில் திருப்பணி துவக்க விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், திரு வெண்ணைநல்லுாரில் சிவஞான போதத்தை உலகுக்கு அருளிய மெய்கண்டார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில், கி.பி., 13ம் நு ாற்றாண்டில் கட்டப்பட்டது. திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு, 22 ஆண்டுகளுக்கு பின், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிக்கான துவக்க விழாவையொட்டி, கடந்த 10ம் தேதி, பூஜைகள் துவ ங்கின. நேற்று காலை யாகசாலை பூஜை நடந்தது. காலை 9.30 மணிக்கு, சிறப்பு பூஜைகளுடன், திருவாவடுதுறை ஆதீனத்தின் 24ம் குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சார்ய சுவாமிகள், திருப்பணியை துவக்கி வைத்தார். பின், மங்களாம்பிகை சமேத கிரு பாபுரீஸ்வரர் கோவிலில் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில், மெய்கண்டார்கோவில் நிர்வாகி திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், ஆய்வாளர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் சண்முகம், திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவில் மேலாளர் வெங்கடேசன் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.