Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பீஹாரில் கட்டப்படுகிறது ஏழுமலையான் ... பழநி வடக்கு கிரிவிதி வீரதுர்க்கை அம்மன் கோயில் கும்பாபிஷேகம் பழநி வடக்கு கிரிவிதி வீரதுர்க்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசு ஒத்துழைப்புடன் குன்றத்தில் அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும் காமாட்சிபுரி ஆதீனம்
எழுத்தின் அளவு:
அரசு ஒத்துழைப்புடன் குன்றத்தில் அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும் காமாட்சிபுரி ஆதீனம்

பதிவு செய்த நாள்

08 டிச
2025
12:12

பல்லடம்; திருப்பரங்குன்றத்தில், அரசின் ஒத்துழைப்புடன் அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது: ஒவ்வொரு மதத்துக்கும் ஒவ்வொரு கோட்பாடு உண்டு. அவரவர் தெய்வ வழிபாட்டு முறைகளை அவரவர்கள் கடைபிடித்து வருகின்றனர். எல்லா மதமும் அன்பை மட்டுமே போதிக்கின்றன. அவ்வாறு, ஹிந்து மதத்தினருக்கு தமிழ் கடவுளாக விளங்கி வரும் முருகப்பெருமான், வேலுண்டு வினையில்லை என்ற சொல்லுக்கு ஏற்ப, பக்தர்களுக்கு ஏற்படும் வினைகளை நீக்கி வருகிறார்.‌ இதன்படி, ஆறுபடை வீடுகளில் ஒன்று திருப்பரங்குன்றம்.‌ பலரும் பல்வேறு தெய்வங்களை வழிபடுவது போல், முருகப்பெருமானுக்கு என, பக்தர்கள் கூட்டம் உள்ளது. அவர்கள், அவர்களின் மத வழிமுறையின்படி, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நினைக்கின்றனர். இப்போது தீபம் ஏற்றி விட்டால், ஒரு‌ ஆண்டுக்கு பிறகே மீண்டும் வரப் போகின்றனர். எனவே, அமைதியாக அங்கு தீபம் ஏற்ற விட்டிருந்தால், யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. இவ்வாறு, பக்தர்கள் மனு கொடுத்து, நீதிமன்றம் அனுமதி கொடுத்தும் அதை செயல்படுத்த முடியவில்லை என்பது வேதனை அளிக்கிறது. வேல் என்பது இன்று மட்டுமல்ல, புராண காலத்திலேயே பிரச்னைக்குறியதுதான். கடவுளுக்கே எத்தனையோ பிரச்னைகள் எழுந்ததாக


புராணங்களில் படித்துள்ளோம். அந்த கடவுள்களும் கூட அசுரர்களுடன் போர் நடத்திதான் வெற்றி கண்டனர். அதுபோலவே இன்றும் நடந்து வருவதால், நாமும் போராடித்தான் இதில் வெற்றி பெற்றாக வேண்டும். ஒருவருக்கு பிரச்னை என்றால், அவரது தாய் தந்தையிடம் செல்வார்கள். நமக்கெல்லாம் தாய் தந்தையாக உள்ள முருகப்பெருமானுக்கே பிரச்னை என்றால், எங்கு செல்வது. இறைவன் அருளால், எந்த இடத்தில் தீபம் ஏற்றப்படவில்லையோ, அதே இடத்தில் தீபம் ஏற்றப்படும். மேலும், அரசின் ஒத்துழைப்புடன், வெகு விரைவில் அதே இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு, அந்த நாள் சிறப்பான நாளாக எல்லோராலும் கொண்டாடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar