பாபநாசம் வட்டம், கொள்ளிடத்தின் தென்கரையில் உள்ளது பட்டுக்குடி கிராமம். இங்கு பழமையான முருகன் கோயில் அமைந்திருப்பது பலருக்கும் தெரியவில்லை. எல்லா சிவன் கோயில்களிலும் முருகன் பிராகாரத்தில் வீற்றிருப்பார். இங்கு சிவனின் வலது பாகத்திலேயே பிரதான முருகனாக வள்ளி, தெய்வானையுடன் பெரிய உருவில் காட்சியளிக்கிறார். எட்டுக்குடி, எண்கண் போலவே இருக்கும் பிரசித்தமான முருகன் அய்யம்பேட்டை கணபதி அக்ரகாரம் வழியாக கண்டகிரயம் வந்து, வடக்கே இரண்டு கிலோமீட்டர் செல்லவேண்டும் ஆட்டோ வசதியுண்டு.