பதிவு செய்த நாள்
29
ஜூலை
2016
12:07
திருப்பூர் : திருப்பூர், சோளிபாளையம், ராம்நகர் கொண்டத்து காளியம்மன் கோவில், ஆடி குண்டம் திருவிழாவில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கடந்த, 20ம் தேதி துவங்கிய விழாவில், 108 திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்குதலில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனை வழிபட்டனர். அன்னதானம், மாவிளக்கு எடுத்தல், சந்தன கருப்பராயன் சிறப்பு பூஜை, மஞ்சள் நீராடல் ஆகியவை நடந்தது. குண்டம் விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டி தலைவர் பிரபு, நிர்வாகிகள் ராமசாமி, நடராஜ், மோகன், ஜான் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.