பதிவு செய்த நாள்
26
ஆக
2016
11:08
திருப்பூர்: கிருஷ்ணன் அவதரித்த தினம், கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஊத்துக்குளி ரோட்டில் உள்ள குருவாயூர ப்பன் கோவிலில், நேற்று காலை, 5:30 மணிக்கு, கோமாதா பூஜை; 6:00 மணிக்கு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. காலை, 6:30 மணிக்கு மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் கிருஷ்ணர் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார்.
* ராயபுரம் கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தி விழா, கடந்த, 22ல், சத்ய சாய் குழுவினரின் பஜனையுடன் துவங்கியது. தினமும் காலை 7:00 மணிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார பூஜைகள், தீபாராதனை, திருப்பாவை, பக்தி இன்னிசை, ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. ஸ்ரீ வடபத்ர சயனார், ஸ்ரீ யதிராஜ சம்பத்குமார், ஸ்ரீ யோகநாராயணன் அலங்காரத்தில் எழுந்தருளினார். நேற்று, ஸ்ரீ வெண்ணைதாழி கிருஷ்ணர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூக்களால் கோவில் முழுவதும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.