பதிவு செய்த நாள்
12
அக்
2016
10:10
சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபடும் விருச்சிக ராசி அன்பர்களே!
சுக்கிரன், குரு ஆகியோர் சாதகமாக காணப்படுகிறார்கள். செவ்வாய் அக்.25க்கு பிறகு சாதகமான இடத்திற்கு வருகிறார். மனதில் பக்தி எண்ணம் மேம்படும். கடவுளின் அருளுக்குப் பாத்திரமாவீர்கள். புதிய முயற்சி அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் படிப்படியாக அதிகரிக்கும். புதிய வீடு, மனை வாங்க யோகம் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு உயரும். அக்.18 வரை புதனால் உங்களுக்கு சாதக பலன் கிடைக்கும். நவ. 3 க்கு பிறகு வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும். சுக்கிரனின் அனுகூலத்தால் பெண்களின் மூலம் பொன், பொருள் சேரும். விருந்து விழா என அடிக்கடி சென்று வருவீர்கள். சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு இனிதே நிறைவேறும். பிள்ளைகளின் வழியில் திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். குறிப்பாக நவ.1,2,3ல் முன்னேற்றமான சம்பவம் நடக்கும். அக்.27,28,29ல் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் நவ.3க்கு பிறகு அவர்களின் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். உடல்நலக்குறைவு வரலாம் கண் சம்பந்தமான நோய் ஏற்பட வாய்ப்புண்டு. பயணத்தின் போது விழிப்புடன் இருக்கவும்.
தொழில், வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். புதனால் மறைமுகப் போட்டியைச் சந்திப்பீர்கள். ராகுவால் பெண்கள் வகையில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. சூரியனால் அவ்வப்போது வீண் விரயம் ஏற்படலாம். அக். 25 வரை அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். அக்.30,31, நவ.4,5ல் தொழிலில் தடைகள் குறுக்கிடலாம். அக். 17,18, நவ.13,14ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். நவ.8க்கு பிறகு வியாபாரிகள் வங்கி கடன் மூலம் விரிவாக்கப்பணியில் ஈடுபடுவர்.
பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். விரும்பிய பணிமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. அக்.25,26ல் எதிர்பாராத சலுகை கிடைக்க வாய்ப்புண்டு. அரசு ஊழியர்களுக்கு செவ்வாயால் இருந்த பிரச்னை அக்.25க்கு பிறகு மறையும். நெருப்பு,
மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். தனியார்துறையில் இருப்பவர்களுக்கு நவ.3க்கு பிறகு பணிச்சுமை அதிகரிக்கலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். நவ.8க்கு பிறகு அரசிடம் இருந்து விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் நல்ல வளர்ச்சி பெறுவர். தொண்டர்நலனில் அக்கறை செலுத்துவர்.
எதிர்பார்த்த பதவி அக்.25க்கு பிறகு கிடைக்கும். நவ.11,12ல் மனக்குழப்பம் ஏற்படலாம் கவனம்.
மாணவர்கள் ஆசிரியர்களின் மத்தியில் நற்பெயர் பெறுவர்.புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். விவசாயிகள் சீரான பலனை எதிர்நோக்கலாம். பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் அக். 25 க்கு பிறகு நிறைவேறும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். நவ. 6,7,8ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். அக்.25க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வர யோகமுண்டு.
நல்ல நாள்: உங்கள் ராசிக்கு அக். 17,18,19,20,25,26,27,28,29 நவ. 1,2,3,6,7,8,13,14,15 ஆகியவை நல்ல நாட்களாகும். இந்த நாட்களில் சுபநிகழ்ச்சிகளுக்குரிய ஏற்பாடு துவங்குதல், பயணம் செய்தல் ஆகியவற்றைச் செய்யலாம்.
கவன நாள்: ஒரு ராசிக்கு எட்டாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் தான் சந்திராஷ்டமம். அந்த வகையில் உங்கள் ராசிக்கு 8ம் இடமான மிதுன ராசியில் சந்திரன் அக்.21,22ல் இருப்பார். இந்த காலத்தில் வீண் விவாதங்களைத் தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் விழிப்புடன் இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட எண்: 1,5 நிறம்: வெள்ளை, மஞ்சள்
பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். சாஸ்தா வழிபாடு சங்கடம் தீர்க்கும். சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபடுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். செவ்வாயன்று முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.