பதிவு செய்த நாள்
20
அக்
2016
12:10
நடுவீரப்பட்டு: எழுமேடு ஸ்ரீ பெருந்தேவி, ஸ்ரீதேவி பூதேவி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோஷணம் நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு கடந்த 17ம் தேதி காலை 9:00 மணிக்கு பகவத் பிரார்த்தனை, எஜமான சங்கல்பம், வாஸ்துசாந்தி, யாசகாலையில் கலசங்களை அலங்கரித்தல் நடந்தது. மாலை 5:00 மணிக்கு புற்று மண் எடுத்தல், அக்னிபிரணயனம், மகாசாந்தி ேஹாமம் நடந்தது. 18ம் தேதி காலை 8:00 மணிக்கு உக்த ேஹாமம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு அனைத்து குண்டங்களுக்கும் ேஹாமம், மகா பூர்ணாகுதி நடந்தது. நேற்று (19ம் தேதி) காலை 6:00 மணிக்கு கோ பூஜை, யாத்ரதானம் நடந்தது. பின்னர் 9:00 மணிக்கு யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்படாகி 9:30 மணிக்கு விமானம், மூலவர் மகா சம்ப்ரோஷணம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஸ்ரீபெருந்தேவி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்து, இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.