Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 18 படிகளில் வசிக்கும் தெய்வங்கள்! ஐயப்பன் என்ற திருநாமம் எதற்கு? ஐயப்பன் என்ற திருநாமம் எதற்கு?
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
சபரிமலை பக்தர்கள் மலையேறும் போது என்ன செய்ய வேண்டும்?
எழுத்தின் அளவு:
சபரிமலை பக்தர்கள் மலையேறும் போது என்ன செய்ய வேண்டும்?

பதிவு செய்த நாள்

29 நவ
2016
05:11

சபரிமலை: சபரிமலை செல்லும் போது நிதானமாக மலை ஏறவேண்டும் என்று பக்தர்களுக்கு தேவசம்போர்டும், சுகாதாரத்துறையும் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.

பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல ஐந்து கி.மீ. துாரம் நடக்க வேண்டும். இதில் மூன்று கி.மீ. செங்குத்தான மலை. இரண்டு கி.மீ. சாதாரண பாதை. நீலிமலையும், அப்பாச்சிமேடும் பக்தர்களை மூச்சுவாங்க வைக்கும். இதனால் மாரடைப்பு காரணமாக பக்தர்கள் இறக்கும் சம்பவமும் அடிக்கடி நடைபெறுகிறது. இதற்காக ஆங்காங்கே ஆக்சிஜன் பார்லர்களும், முதலுதவி மையங்களும், ஆஸ்பத்திரிகளும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் பக்தர்கள் டாக்டர்களின் உரிய ஆலோசனைகளை பின்பற்றினால் சிரமங்களை தடுக்கலாம். மலை ஏறும் போது வயிறு நிறைய சாப்பிடக்கூடாது. பொறுமையாக ஏற வேண்டும். ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியில் சற்று நேரம் நின்று இளைப்பாறிய பின்னர் பயணம் செய்ய வேண்டும். வேகமாக ஏறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒரு கெடு நிர்ணயித்து இத்தனை நேரத்துக்குள் மலையேற வேண்டும் என்று செல்லக்கூடாது. மலை ஏறும் போது அசாதாரண நிலை உணர்ந்தால் பக்கத்தில் உள்ள முதலுதவி மையம் அல்லது ஆஸ்பத்திரியில் சென்று பரிசோதனை செய்ய வேண்டும்.

மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டவர்கள் கண்டிப்பாக டாக்டர்கள் அனுமதி பெற்றே பயணம் செய்ய வேண்டும். எவ்விதமான நோய்க்கும் நீண்ட நாட்கள் தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வருபவர்கள் சபரிமலை பயணம் புறப்படும் முன்னர் டாக்டர்களை கலந்து ஆலோசித்து மருந்துகள் வாங்கி வரவேண்டும். மருந்து சாப்பிடுவதை நிறுத்த கூடாது. இருமுடியில் தேவையான பொருட்களை மட்டுமே கொண்டு வரவேண்டும். டாக்டர்கள் அறிவுரையை மீறி மலையேற முயற்சிக்க கூடாது.  தற்போது பாட்டில் குடிநீர் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதால் பக்தர்கள் குப்பி பாட்டில் அல்லது தரமான பிளாஸ்டிக் பாட்டில் கையில் கொண்டு வரவேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வரும் குழாய்களில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். மலையேறும் போது தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு பக்தர்கள் அறிவிறுத்தப்பட்டுள்ளனர்.

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar