காவிரி புஷ்கரம் விழாவை அரசு விழாவாக ஏற்று நடத்த வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2017 05:03
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் 2017 விழாவை தமிழக அரசு விழாவாக ஏற்று நடத்த வேண்டும் என்று பக்தர்கள் சாரபில் சுவாமி ராமானந்த மகராஜ் வலியுறுத்தியுள்ளார்.
புஷ்கரம் என்பது மேஷ ராசி முதல் மீன ராசி வரை உள்ள 12 ராசிகளும் அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை பாலிப்பது ஆகும். துலாம் ராசி கா விரி நதிக்குறியது.காவிரி புஷ்கரம் என்பது குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு மாறும் குருபெயர்ச்சி காலம். வரும் செப்டம்பர் 12ம் தேதி நடைபெற உள்ள குருபெயர்ச்சி முதல் 12 நாட்கள் காவிரி புஷ்கரம் புண்ணியகாலம். இதனை ஆதி புஷ்கரம் என்று அழைப்பார்கள். அடுத்த ஆண்டு 2018ல் குருபகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி நடைபெறும் முன் உள்ள 12 நாட்களை அந்தி புஷ்கரம் என்று அழைப்பாளர்கள். ஐப்பசி மாதம் 30 நாட்களும் மாயூரம் காவிரி துலாக்கட்டத்தில் நீராடினால் பாவங்கள் நீங்குவது போன்று ஆதி புஷ்கரம் காலத்தில் நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் புனித நீராடினால் பாவங்கள் நீக்கும்.
மயிலாடுதுறையில் வரும் செப்டம்பர் மாதம் காவிரி புஷ்கரம் 2017 விழாவை கொண்டுவதற்காக காவிரி புஷ்கரம் 2017 அறக்கட்டளை(கமிட்டி) தொடக்கப்பட்டு நேற்று காவிரி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்ப ட்டது. அதனை முன்னிட்டு காவிரி ரிஷப நந்தி மண்டம் அருகே கோபூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜையுடன் கணபதிஹோமம் நடைபெற்று காவிரி தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி யது. காவிரி புஷ்கரம் கமிட்டி தலைவர் சுவாமி ராமானந்த மகாராஜ் தூய்மை பணிகளை தொடங்கி வைத்துப் பேசுகையில் கடந்தாண்டு ஆந்திரா மாநிலத்தில் விஜயவாடாவில் கிருஷ் ணா புஷ்கரம் 2016 விழா அந்த மாநில அரசு சார்பில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதே போல் தமிழகத்தில் இவ்வாண்டு காவிரி புஷ்கரம் 2017 விழாவினை அரசு விழாவாக அறி வித்து காவிரியை மேம்படுத்தும் ஆக்கப்பூர்வ பணிகளை அரசு தொடங்க வேண்டும். காவிரி மேம்பாட்டிற்கான நிதியை மத்திய அரசிடம் கேட்டு பெற்று காவிரி தூய்மையை பாதுகா க்க வேண்டும். புஷ்கரம் விழாவில் தமிழக முதல்வர் மட்டுமின்றி பாரத பிரதமரும் கலந்துகொள்ள மாநில அரசு அழைப்பு விடுக்கவேண்டும். அதன்முதல் கட்டமாகத்தான் தற்போது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு மாயூரம் காவிரி துலாக்கட்டத்தை தூய்மைப்படுத்துகின்றனர். காவிரியின் பு னிதத்தை பாதுகாக்க பக்தர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் காவிரியில் குப்பைகளை போடாமல் தூய்மையாக வைத்துகொள்ள ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றார். இதில் நகர முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர்.