திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலின் பெரிய வைரத்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நேற்று துவங்கியது. கோயில் முன் 24 அடி உயரம், 24 அடி அகலம், 24 அடி நீளம், 40 டன் எடை க�ொ ண்ட பெரிய வைரத்தேர் நிறுத்தப்பட்டுள்ளது. பங்குனி திருவிழா திருக்கல்யாணம் முடிந்த மறுநாள், சுவாமி, தெய்வானை, இத்தேரில் எழுந்தருள,கிரிவீதியில் தேரோட்டம் நடக்கும். கலை நயத்துடன் தேரின் வெ ளிப்பகுதி மட்டுமின்றி உட்பகுதியிலும் ஏராளமான சிற்பங்கள் உள்ளன. இதுவரை விழா முடிந்ததும் தகரங்களால் மூடி தேர் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனால் பக்தர்கள் தேரின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.மீனாட்சி அம்மன் கோயில் போன்று குன்றத்து தேரையும் 11.30 லட்சம் ரூபாயில் ‘கண்ணாடி’ சீட் அமைத்து பாதுகாக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன.