சிங்கம்புணரி: சிங்கம்புணரி பத்திர காளியம்மன் கோயிலில் பங்குனித்திருவிழாவையொட்டி பால்குட விழா நடந்தது. இக்கோயிலில் பங்குனித்திருவிழா ஏப்.11ம் தேதி காப்புகட்டுடன் தொடங்கியது.ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 8ம் நாளான ஏப் 18ம் தேதி காலை 10:00 மணிக்கு பால்குட விழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் ஏந்தி வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர்.