பதிவு செய்த நாள்
26
ஜூன்
2017
12:06
சேலம்: ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் அடுத்த, பூரி ஜெகநாதர் கோவிலில், ரத யாத்திரை நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. அதையொட்டி, சேலம், கருப்பூரில் உள்ள இஸ்கான் அமைப்பு சார்பில், நேற்று, ஜெகநாதர் ரத யாத்திரை நடந்தது. சேலம், பட்டைக்கோவில் அருகே, பூரி ஜெகநாதர் ரதம் போன்று அலங்கரித்ததில், சிறப்பு அலங்காரத்துடன் ஜெகநாதர் - சுபத்ரா, பாலபத்திரர் எழுந்தருளினர். அவர்களுக்கு, சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். பின், ரத யாத்திரை, சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம், நான்கு ரோடு, ஐந்து ரோடு வழியாக, சோனா கல்லூரியை வந்து அடைந்தது. வழிநெடுக, பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர். பின், மாலை, 6:30 மணிக்கு சிறப்பு பஜனை, 7:00 மணிக்கு ஜெகநாதரின் லீலை, 8:00 மணிக்கு அஜாமிளன் நாடகம் நடந்தது.