Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உள்ளம் குளிர அருள்பவர் பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்! பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!
முதல் பக்கம் » துளிகள்
வேதங்களில் பஞ்ச பூதப்பிரார்த்தனைகள்!
எழுத்தின் அளவு:
வேதங்களில் பஞ்ச பூதப்பிரார்த்தனைகள்!

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2017
01:07

1. நீர்(தண்ணீர்)

அபார்ந்யுஷ்ணிம பாரக்ஷ:
அபாச்ந்யுஷ்ணிமபாரகம்
அபாக்ராமபசாவர்த்திம்:
அபதேவீரி தோஹித
(தைத்திரீயாரண்யகம் 1-3-1)

நீரில் உறையும் தெய்வங்களே! அநுபவிக்கப்படும் பொருள்களை எரிப்பதன் வாயிலாக அநுபவிப்பவர்களை எரிக்கும் நெருப்பு என்னை அணுகாமல் விலக்கியருள்வீர்களாக! அவ்வாறே துன்பம் தரும் அரக்கர்களை அகற்றுவீர்களாக! உடலை வாட்டும் காய்ச்சலை விரட்டுவீர்களாக! துன்பத்திற்குக் காரணமான பாபங்களைப் போக்கியருள்வீர்களாக! பொறிகள் புலனாற்றற் குறைவை (இந்த்ரியங்களின் சக்திக் குறைபாட்டை) போக்குவீர்களாக! பொருளின்மையையும் போக்கியருள்வீர்களாக! அனைத்து இடையூறுகளையும் அறவே அகற்றி அருள்புரிவீர்களாக!

2. பூமி (நிலம்)

மநோர ஸ்வாஸி பூரிபுத்ர
விஸ்வாப்யோ மா நாஷ்டராப்ய பாஹி ஸீபஸதா
மே பூயா மாமா ஹிகும்ஸி
(தைத்திரீய ஆரண்யகம் 4:5:4)

ஓ...... பூமித்தாயே! எண்ணற்ற மக்களால் நீ நிறைந்திருக்கிறாய். அழிவிற்கான அனைத்துக் காரணங்களிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயாக இன்பமாக வாழ்வதற்கும் தகுதி உடையவர்களாக ஆக்குவாயாக அறியாமையால் நாங்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அருள்புரிவாயாக!

3. வாயு (காற்று)

வாத ஆவாது பேஷஜகும் சம்பூர்மயோபூர்நோ ஹ்ருதே
ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்
(தைத்திரீயாரண்யகம்:4.42.8)

இக்காற்று மாமருந்தாக வீசட்டும். நம் உள்ளத்தில் துன்பத்தை நீக்கி இன்பத்தைப் பெருகட்டும். நமது வாழ்நாளையும் நன்கு நீண்டதாக வளர்த்து அருளட்டும்.

4. ஆகாயம்(ஒளி)

ரோசி தஸ்த்வம் தேவ கர்ம தேவேஷ்வஸி
ரோசிஷீயாஹம் மதுஷ்யேஷீ
(தைத்திரீயாரண்யகம்: 4.6.2)

பெரும் வீரனாகிய இந்திர தேவனே! நீ தேவர்களுள் ஒளி மிக்கவனாய் விளங்கிறாய், உன்னைப் போற்றி வழிபடும் நானும் உனது அருளால் மக்களிடையே ஒளிமிக்கவனாக விளங்குவேனாக.

5. அக்னி (தீ)


ஸந: பிதேவஸீநவேக்நேஸீபாயநோபவ
ஸசஸ் வாந: ஸ்வஸ்தயே
(ரிக் வேதம் அக்நிஸீக்தம்: 1.1.9)

அக்னி தேவனே! மகனுக்குத் தந்தைபோல, நீங்கள் எங்களுக்கு எளிதில் அணுகத்தக்கவராக இருப்பீராக! எங்களுடைய நன்மையின் பொருட்டு எப்பொழுதும் எங்களுடன் இருப்பீராக!

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar