Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உள்ளம் குளிர அருள்பவர் பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்! பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!
முதல் பக்கம் » துளிகள்
வேதங்களில் பஞ்ச பூதப்பிரார்த்தனைகள்!
எழுத்தின் அளவு:
வேதங்களில் பஞ்ச பூதப்பிரார்த்தனைகள்!

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2017
01:07

1. நீர்(தண்ணீர்)

அபார்ந்யுஷ்ணிம பாரக்ஷ:
அபாச்ந்யுஷ்ணிமபாரகம்
அபாக்ராமபசாவர்த்திம்:
அபதேவீரி தோஹித
(தைத்திரீயாரண்யகம் 1-3-1)

நீரில் உறையும் தெய்வங்களே! அநுபவிக்கப்படும் பொருள்களை எரிப்பதன் வாயிலாக அநுபவிப்பவர்களை எரிக்கும் நெருப்பு என்னை அணுகாமல் விலக்கியருள்வீர்களாக! அவ்வாறே துன்பம் தரும் அரக்கர்களை அகற்றுவீர்களாக! உடலை வாட்டும் காய்ச்சலை விரட்டுவீர்களாக! துன்பத்திற்குக் காரணமான பாபங்களைப் போக்கியருள்வீர்களாக! பொறிகள் புலனாற்றற் குறைவை (இந்த்ரியங்களின் சக்திக் குறைபாட்டை) போக்குவீர்களாக! பொருளின்மையையும் போக்கியருள்வீர்களாக! அனைத்து இடையூறுகளையும் அறவே அகற்றி அருள்புரிவீர்களாக!

2. பூமி (நிலம்)

மநோர ஸ்வாஸி பூரிபுத்ர
விஸ்வாப்யோ மா நாஷ்டராப்ய பாஹி ஸீபஸதா
மே பூயா மாமா ஹிகும்ஸி
(தைத்திரீய ஆரண்யகம் 4:5:4)

ஓ...... பூமித்தாயே! எண்ணற்ற மக்களால் நீ நிறைந்திருக்கிறாய். அழிவிற்கான அனைத்துக் காரணங்களிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவாயாக இன்பமாக வாழ்வதற்கும் தகுதி உடையவர்களாக ஆக்குவாயாக அறியாமையால் நாங்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அருள்புரிவாயாக!

3. வாயு (காற்று)

வாத ஆவாது பேஷஜகும் சம்பூர்மயோபூர்நோ ஹ்ருதே
ப்ரண ஆயுகும்ஷி தாரிஷத்
(தைத்திரீயாரண்யகம்:4.42.8)

இக்காற்று மாமருந்தாக வீசட்டும். நம் உள்ளத்தில் துன்பத்தை நீக்கி இன்பத்தைப் பெருகட்டும். நமது வாழ்நாளையும் நன்கு நீண்டதாக வளர்த்து அருளட்டும்.

4. ஆகாயம்(ஒளி)

ரோசி தஸ்த்வம் தேவ கர்ம தேவேஷ்வஸி
ரோசிஷீயாஹம் மதுஷ்யேஷீ
(தைத்திரீயாரண்யகம்: 4.6.2)

பெரும் வீரனாகிய இந்திர தேவனே! நீ தேவர்களுள் ஒளி மிக்கவனாய் விளங்கிறாய், உன்னைப் போற்றி வழிபடும் நானும் உனது அருளால் மக்களிடையே ஒளிமிக்கவனாக விளங்குவேனாக.

5. அக்னி (தீ)


ஸந: பிதேவஸீநவேக்நேஸீபாயநோபவ
ஸசஸ் வாந: ஸ்வஸ்தயே
(ரிக் வேதம் அக்நிஸீக்தம்: 1.1.9)

அக்னி தேவனே! மகனுக்குத் தந்தைபோல, நீங்கள் எங்களுக்கு எளிதில் அணுகத்தக்கவராக இருப்பீராக! எங்களுடைய நன்மையின் பொருட்டு எப்பொழுதும் எங்களுடன் இருப்பீராக!

 
மேலும் துளிகள் »
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஆதிபராசக்தியை ஆடி மாதத்தில் வணங்கி நாம் பெற வேண்டிய அம்பிகையின் திருநாமங்கள் கூறி நலம் பெறுவோம். ... மேலும்
 
temple news
மேற்கு தாம்பரம் நகரில், முத்துரங்கம் பூங்கா என்று அழைக்கப்படும் பூங்காவானது, 75 ஆண்டுகளுக்கு முன், ... மேலும்
 
temple news
சென்னைக்கு அருகில் 23 கி.மீ., தொலைவில் ஓ.எம்.ஆர்., சாலை காரப்பாக்கம், சென்னை மாநகராட்சி 198 வது வார்டில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar