கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், நடைபெறும், வள்ளி – மணவாள பெருமான் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிப்போருக்கு திருமண தடை விலகும், குழந்தை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழுவினரின், எட்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அந்த அமைப்பு சார்பில், கோவிலில் நாளை, வள்ளி – மணவாள பெருமானுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடைபெற உள்ளது. காலை, 9:00 மணிக்கு அபிஷேகமும், 10:30 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது.