ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகேயுள்ள உத்தரகோசமங்கை பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத், கிராமக்கோயில் பூஜாரிகள் அமைப்பு சார்பில் கோ பூஜை,யாகம் நடந்தது. கண்ணன் கோயிலில் நடந்த நிகழ்ச்சிக்கு கிராமக்கோயில் பூஜாரிகள் அமைப்பின் மண்டல அமைப்பாளர் எம்.எம்.கோதாவரி தலைமை வகித்தார்.விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில நிர்வாகி பி.காமாட்சி முன்னிலை வகித்தார். கிராமக்கோயில் பூஜாரிகள் அமைப்பின் மாநில அமைப்பாளர் எஸ்.சோமசுந்தரம் கோ பூஜை பற்றி பேசினார். இதில் கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவை மாவட்ட அமைப்பாளர் ஆர்.வி. அன்புமாறன், வி.ஆறுமுகம், யாதவர் சங்கத்தலைவர் கருணாகரன், திருமால் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் 151 கோமாதாக்கள் கலந்து கொண்டன. யாக வேள்வி நடத்தி, கோ பூஜை செய்யப்பட்டது.