சித்தி புத்தி கணபதியாக சேலம் ராஜகணபதி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04செப் 2017 01:09
சேலம்: ராஜகணபதி, சித்தி புத்தி கணபதியாக அருள்பாலித்தார். சேலம், தேரடி வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், கடந்த, 23ல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. நேற்று காலை, அதிகாலை சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, சித்தி புத்தி கணபதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள், குடும்பத்தினருடன் வந்து, சுவாமியை தரிசித்தனர். இரவு, 12:00 மணிக்கு சத்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது.