பதிவு செய்த நாள்
16
அக்
2017
02:10
நடுநிலை தவறாத விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் செவ்வாய், கேது சாதகமாக உள்ளனர். சுக்கிரன் நவ. 2- வரை சாதகமான இடத்தில் இருந்து நன்மை தருவார். இதனால் பணவரவும், சொந்தபந்தங்கள் வருகையும் இருக்கும். கடவுளின் கருணையும், பொன், பொருளும் கிடைக்க கிரகங்கள் மிக உறுதுணையாக உள்ளன. எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய வீடு,- மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். கணவன், -மனைவி இடையே சந்தோஷமும் ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். அக்.22,23,24ல் அவர்களால் முன்னேற்றமான சம்பவங்கள் நடக்கும். அக். 30,31-ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் அக். 18,19, நவ.14,15-ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அக். 27-க்கு பிறகு புதனால் வீட்டினுள் சிற்சில பிரச்னை வரலாம். உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம்.
பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். உழைப்புக்குரிய மரியாதையும், வருமானமும் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். அல்லது இடமாற்றத்தை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையில் பொறுமையும், நிதானமும் தேவை. நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். நவ.12,13-ல் எதிர்பாராத நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.
முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செவ்வாயால் அரசு ஊழியர்களுக்கு இருந்து வரும் பிரச்னை மறையும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். கோரிக்கைகள் நிறைவேறும்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு தொழில் சிறந்து விளங்கும். ஆன்மிகம் சார்ந்த பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். வெளியூர் பயணம் இருக்கும். சூரியனால் பொருள் விரயம் ஏற்படும். தொழிலில் நஷ்டம் உருவாகலாம். அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பகைவர் வகையில் தொல்லை வரும். அக்.20,21,25,26, நவ. 16ல் மதிப்பு, மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. சிலருக்கு தலைகுனிவு வரலாம். நவ.3,4-ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவர். சிலர் பெண்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்தை பெறலாம். நவ.2-க்கு பிறகு காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். உங்கள் செல்வாக்குக்கு எந்த குறையும் வராது. பணவரவைக் காணலாம்.
மாணவர்கள் மெத்தனமாக இருக்க வேண்டாம். சிரத்தை எடுத்து படித்தால் தான் பலன் கிடைக்கும். புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாக வழியுண்டு. கவனம் தேவை.
விவசாயிகள் சீரான பலனை எதிர்நோக்கலாம். பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். கணவரின் அன்பு கிடைக்கும். குடும்பத்தோடு புனிதத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும்.
அக். 27-க்கு பிறகு அண்டை வீட்டார் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். நவ.3-க்கு பிறகு சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பங்கு வர்த்தகம் நல்ல லாபம் தரும். அக். 27,28,29ல் புத்தாடை, நகை வாங்கலாம்.
-
* நல்ல நாள்: அக்.18, 19, 22, 23, 24, 27, 28, 29, நவ.3, 4, 5, 6, 12, 13, 13, 14, 15.
* கவன நாள்: நவ. 7,8,9- சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 3,7
* நிறம்: வெள்ளை, சிவப்பு.
* பரிகாரம்:
● சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு
● காலையில் நீராடியதும் சூரிய தரிசனம்
● வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை