பதிவு செய்த நாள்
16
அக்
2017
02:10
அன்புள்ளம் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!
இந்த மாதம் சுக்கிரன் நவ.3ல் சாதகமான இடத்துக்கு வருகிறார். இதனால் உங்களுக்கு வீட்டுப் பெண்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் பொருள் சேரும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சந்திரனும் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் எந்த செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியிருக்கும். ஆனால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. குரு பகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. ஆனால் அவரது 10ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். சற்று ஒதுங்கி இருக்கவும்.
புதனால் வீட்டினுள் இருந்த பிரச்னை, உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு, பொருள் இழப்பு முதலியன அக். 27-க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு அவரால் உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். நவம்பர் 2-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் உள்ள பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். கணவன், -மனைவி இடையே அன்பு பெருகும். அக்.20,21, நவ.16-ல் சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர். பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்.27,28,29-ல் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். ஆனால் நவ.12,13-ல் உறவினர்கள் வகையில் ஒற்றுமை மேம்படும். அவர்களால் முன்னேற்றம் காணலாம்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளின் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். லாபம் கிடைக்கும் என்றாலும், விரயமும் ஏற்படும். அக்.18,19,22,23,24 நவம்பர் 14,15-ல் வரவு, செலவைக் கவனமாக கண்காணிக்க வேண்டும். நவம்பர்1,2ல் எதிர்பாராத வருவாய் கிடைக்கும். சனி பகவானின் 10-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் வியாபாரத்தில் வருகிற தடைகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் நவம்பர் 2-க்கு பிறகு மறையும்.
பணியாளர்கள் இடமாற்றம் காணலாம். சிலர் குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரிய வேண்டியிருக்கும். இடமாற்ற பீதி அக்.27க்கு பிறகு மறையும். அதன் பிறகு சக பெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். நவ.10,11-ல் சிறப்பான நாட்களாக அமையும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொது நல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியைப் பெற முடியாது. அக். 30,31-ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு குரு பார்வை பக்க பலமாக இருப்பதால் முன்னேற்றம் காணலாம். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அசட்டையாக இருந்து விட வேண்டாம். விவசாயிகள் சீரான மகசூலைப் பெறுவர். உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். பசு வளர்ப்பில் நல்ல பணம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தடைபடலாம். பெண்களுக்கு குரு பார்வையால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அவரது 9-ம் இடத்து பார்வை மூலம் தம்பதி இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரும். சுக்கிரனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணவரவு கணிசமாக இருக்கும்.
அக்.25,26, நவ.15,16-ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கும். நவ.3,4-ல்
விருந்து விழா என சென்று வருவீர்கள்.
-
* நல்ல நாள்: அக்.20, 21, 25, 26 நவ.1, 2, 3, 4, 10, 11, 12, 13, 16.
* கவன நாள்: நவ.5, 6- சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 2, 4
*நிறம்: வெள்ளை, பச்சை
* பரிகாரம்:
● ராகு, கேதுவுக்கு அர்ச்சனை.
● ராகு காலத்தில் பைரவருக்கு பூஜை.
● சனிக்கிழமை சனிபகவானுக்கு எள் தீபம்.