பதிவு செய்த நாள்
22
நவ
2017
10:11
பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 15ம் ஆண்டு சம்பக சஷ்டி விழா நடந்து வரு கிறது.
நவ. 18 அன்று மாலை 5:30 மணிக்கு சித்தி விநாயகர் சன்னதியில் அனுக்ஞையுடன் தொடங்கி யது. மறுநாள் காலை 10 மணிக்கு பைரவருக்கு விசேஷ அபிஷேகம், விபூதி காப்பு, சகஸ்ரநாம அர்ச்சனையுடன்தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து தினமும் காலையில் அபிஷேகமும், மாலை பச்சை, சிவப்பு, வெள்ளை சாத்தி, வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நவ. 24 ல் காலை 6:00 மணி முதல் சம்பக சஷ்டி ஓம் அதி சந்துஷ்ட பைரவ யாகம் நடக்கும். மேலும் சுந்தரேஸ்வரர், மீனாட்சி, பைரவர், சித்தி விநாயகர், வள்ளி தேவ சேனா சமேத முருகனுக்கும் ஏககாலத்தில் அபிஷே கமும், இரவு சந்தன அலங்காரம் சாத்தப்படும்.
நவ., 25 ல் காலை பாவாடை நெய்வேத்தியம், வெள்ளிக்கவசம் அணிவிக்கப்படும். பகல் 12:00 மணிக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை ஆயிர வைசிய சபை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேவஸ்தானம் மற்றும் பைரவர் அஷ்டமி விழாக்குழுவினர் செய்துள்ளனர்.