பதிவு செய்த நாள்
16
ஜன
2018
01:01
திருத்தணி: மாட்டுப்பொங்கல் வைத்து உற்சவர் தணிகாசலம்மன் திருத்தணி நகர வீதிகளில், நேற்று, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி, அக்கைய்யா நாயுடு சாலையில், தணிகாசலம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும், மாட்டு பொங்கல் தினத்தன்று, உற்சவர் அம்மன், திருத்தணி நகர வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில், நேற்று, மாட்டு பொங்கல் விழாவையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின், திருத்தணி நகர வீதிகளில் வீதியுலா வந்து, உற்சவர் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மன் வீதியுலாவையொட்டி, பெண்கள் தங்களது வீடுகள் முன், வண்ண கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர்.