பதிவு செய்த நாள்
16
ஜன
2018
01:01
ஓட்டேரி: மாட்டு பொங்கலை முன்னிட்டு, ஓட்டேரியில் உள்ள பசுக்கள் காப்பகத்தில், 2,000 மாடுகளுக்கு, பொதுமக்கள் உணவு அளித்து மகிழ்ந்தனர். பொங்கல் கொண்டாட்டத்தின், இரண்டாம் நாளான நேற்று, விவசாயத்திற்கு உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மாட்டு பொங்கல் திருவிழா, சென்னை முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.நகரத்தில் வாழ்ந்தாலும் பாரம்பரியத்தை மறக்காமல், சென்னை ஓட்டேரி, கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள பிஞ்சரா போல் பசுக்கள் காப்பகத்தில், மாட்டு பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.இந்த விழாவில், காப்பகத்தில் இருந்த, 2,000 மாடுகளுக்கு, காலை, 7:00 மணியளவில், விஷ்ணு சகஸ்ரம நாமம் பாராயணம் செய்யப்பட்டது. பின், காலை, 10:00 மணிக்கு, கோ பூஜை நடந்தது.இதில் பல்வேறு பொதுமக்கள் பங்கேற்று, காய்கறி, கீரை வகைகள், பழங்கள், கோதுமை அல்வா உள்ளிட்ட உணவு வகைகளை மாடுகளுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.