பதிவு செய்த நாள்
14
மார்
2018
12:03
திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, கொடியேற்றத்துடன் நேற்று, துவங்கியது. திருவள்ளூர், பஜார் தெருவில், திரிபுரசுந்தரி அம்பாள் சமேத தீர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது.
கோவில் பூஜைகள் நித்தியம், நைமித்திகமென இரு வகைப்படும். நித்தியத்தின் குறைவு தீரச் செய்வது நைமித்திக பூஜை. இதையொட்டி, பங்குனி மாதத்தில் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் இரவு. விக்னேஸ்வரர் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று காலை, 6:30 மணிக்கு துவஜாரோஹனம் (கொடியேற்றம்) நடந்தது. தொடர்ந்து, சப்பரத்தில் உற்சவர் புறப்பாடும், இரவு, 8:00 மணிக்கு, சிம்ம வாகனத்தில் புறப்பாடும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான அதிகார நந்தி சேவை, நாளை இரவு, 8:00 மணிக்கு, நடைபெறுகிறது. தினமும், காலை, மாலை இரு வேளையிலும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதி வலம் வருவார். விழாவை முன்னிட்டு, காலை, மாலை வேதபாராயணமும், 17ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு தேவார இன்னிசை கச்சேரியும், 20ம் தேதி காலை, திருமுறை திருவிழாவும் நடைபெறுகிறது.