பதிவு செய்த நாள்
16
மார்
2018
02:03
அவிநாசி : கருவலுார் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வரும் 30ம் தேதி துவங்குகிறது. ஏப்.,4 முதல் 6ம் தேதி வரை தேரோட்டம் நடக்கிறது. அவிநாசி அருகேயுள்ள, கருவலுாரில், பல நுாறு ஆண்டு பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, மாரியம்மன் கோவில் உள்ளது. கோவில், தேர்த்திருவிழா, வரும், 30ம் தேதி, கிராம சாந்தி உற்சவத்துடன் துவங்குகிறது. 31ம் தேதி, திருவிழா கொடியேற்றமும், அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலாவும் நடக்கிறது. ஏப்.,1ல், பூத வாகன காட்சி, 2ல், ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,3ல், மலர் பல்லக்கு உற்சவம், அம்மன் அழைப்பு மற்றும் சுவாமி திருக்கல்யாண உற்சவம், யானை வாகனத்தில் எழுந்தருளி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 4ம் தேதி காலை, 6:00 மணிக்கு, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அன்று மாலை, 2:00க்கு, தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. அன்றும், அடுத்த இரண்டு நாட்களும் தேரோட்டம் நடக்கிறது. 7ம் தேதி பரிவேட்டை, அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், தெப்ப உற்சவம், காமதேனு வாகன காட்சி நடக்கிறது. 8ம் தேதி, அம்மன் மகா தரிசனம், சப்பரத்தில் புறப்பாடு, இரவு மஞ்சள் நீர், அன்ன வாகன காட்சி, கொடி இறக்கம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 11ம் தேதி, மறு பூஜை, பாலாபிேஷகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. தேர்த்திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.