பதிவு செய்த நாள்
02
ஜன
2012
12:01
வேலாயுதம்பாளையம்: காகித ஆலை குடியிருப்பு பகுதியில் உள்ள வல்லப கணபதி கோவிலில் உலக நன்மைக்காக ஐந்தாவது ஆண்டாக மஹா நவசண்டியாக விழா நடந்தது. காகிதபுரம் காகித ஆலை எதிரில் உள்ள குடியிருப்பில் வல்லப கணபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் தினசரி பூஜைகளும், பவுர்ணமி மற்றும் வாரத்தில் முக்கிய நாள்களில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகின்றன. கோவிலில் உலக மக்கள் நன்மைக்காக வேண்டி ஸ்ரீவிக்னேஸ்வர், துர்க்கை அம்மனுக்கு ஐந்தாம் ஆண்டாக மஹா நவசண்டியாக யாகம் 28ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கப்பட்டு, மஹா ஸங்கல்பம், புண்யாஹவாசனம், வாஸ்து சாந்திபலி பூøஐ, தீபாராதனை ஆகியன நடந்தது. மறுநாள் காலை விக்னேஸ்வர பூஜை, மஹாகணபதி ஹோமம், நவக்கிரக அஸ்தர ஹோமம், சுதர்சன ஹோமம், சர்ப்ப சாந்தி ஹோமம், மாலையில் புண்யாஹவாசனம், சண்டியாக ஸங்கல்பம் பஞ்சகவ்யம், மிருத்சங்கிரகணம், சண்யாக கலச ஸ்தாபனம், தேவிமஹாத்மிய பாராயணம், முதலாம் கால யாக ஹோமம் தீபராதனை நடந்தது இரண்டாம் காலயாக பூஜையாக தேவிமஹாத்மிய பாராயணம், அத்யாய ஹோமம், சுமங்கலிபூஜை, தம்பதிபூஜை, மாங்கல மஹா பூர்ணாஹுதி, கலச அபிஷேகம் பூஜை தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் ஸ்வாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை காகித ஆலை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.