பதிவு செய்த நாள்
19
ஏப்
2018
01:04
சென்னை: நங்கநல்லுார் சத்ய சாய் பிரேமாலயம், நங்கநல்லுார் - மீனம்பாக்கம், ஸ்ரீ சத்ய சாயி சேவா சமிதியின் புதிய கட்டடம், நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி, ஆறு நாட்களுக்கு விழா, கோலாகலமாக நடத்தப்படுகிறது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட, சத்ய சாயி சேவா நிறுவனத்தின், சத்ய சாயி சேவா சமிதி நங்கநல்லுார் - மீனம்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இந்த சமிதியின் புதிய கட்டடம், நங்கநல்லுார் இந்து காலனியில் திறக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, ஆறு நாட்கள் விழா, நாளை அதிகாலை ஓம்காரம், சுப்ரபாதம், நகர் சங்கீர்த்தனத்துடன் துவங்குகிறது. காலை, 8:00 மணிக்கு புதிய கட்டடம் திறக்கப்பட்டு, பகவான் பாதத்தில் சமர்ப்பித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்.,25 வரை நடக்கும் இவ்விழாவில், தினமும், காலை, 5:15 முதல், 10:00 மணி வரையிலும், மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரையும் வேதபாராயணம், அர்ச்சனை, பஜனை, குத்துவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.