பதிவு செய்த நாள்
19
நவ
2018
03:11
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்ய சாய்பாபாவின், 93வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள், இன்று நவம்., 19ல் துவங்கி, 23ம் தேதி வரை, வெங்கடேசா காலனி ஸ்ரீ வாரி கார்டன்ஸ் சாய் மதுரம் கோவிலில் நடக்கிறது.
நவம்., 19 முதல், வரும், 23ம் தேதி வரை தினமும் காலை, 5:00 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தன பூஜை நடக்கிறது. விழாவையொட்டி, நவம்., 19 காலை, 6:00 மணிக்கு பிரசாந்தி கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை, 5:30 மணிக்கு 93 விளக்குகள் ஏற்றி திருவிளக்கு வழிபாடு, இரவு, 7:00 மணிக்கு சாய் பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது. 20ம் தேதி மாலை, 5:30 மணிக்கு சிறப்பு சொற்பொழிவு, இரவு, 7:00 மணிக்கு சாய் பஜனும்; 22ம் தேதி மாலை, 5:30 மணிக்கு சத்ய நாராயண பூஜை, மாலை, 6:30 மணிக்கு சாய் பஜன் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும், 23ம் தேதி காலை, 6:00 மணிக்கு காயத்ரி மந்தரபாராயணம், காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமம், திருமண தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமம், காலை,
10:00 மணிக்கு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை, பிரசாதம் வழங்குதல்; மதியம், 12:00 மணிக்கு சிறப்பு நாராயண சேவை, மாலை, 5:30 மணிக்கு சத்சங்கம் மற்றும் சாய்பஜன் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்வசம், மகா மங்கள ஆரத்தியும் நடக்கிறது.