Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அபிஜித் முகூர்த்தம் என்றால் என்ன? புராணத்தில் நவராத்திரி புராணத்தில் நவராத்திரி
முதல் பக்கம் » துளிகள்
21 தலைமுறை பாவம் போக்கும் தாமிரபரணி புஷ்கரிணி!
எழுத்தின் அளவு:
21 தலைமுறை பாவம் போக்கும் தாமிரபரணி புஷ்கரிணி!

பதிவு செய்த நாள்

06 அக்
2018
12:10

தமிழகத்திலையே உற்பத்தியாகி தமிழகத்திலையே கடலில் கலக்கக்கூடிய தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கு 144 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. தாமிரபரணி மஹா புஷ்கரிணி. இந்தியா முழுவதிலிமிருந்து சுமார் 2 கோடி பக்தர்கள் இந்த புண்ணிய நதியில் நீராட இருக்கிறார்கள். இத்தனை பக்தர்களும் நீராடும் வகையில் ஆங்காங்கே பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாகவும். ஊர்மக்கள் சார்பாகவும், கோவில் விழா கமிட்டியினர் சார்பாகவும். தாமிரபரணி நதிக்கரை முழுவதும் ஏற்கனவே இருந்த படித்துறைகளை சீரமைத்தும், புதிதாக பல இடங்களில் படித்துறைகளை உருவாக்கியும் வருகிறார்கள். தற்போது நெல்லை மாவட்டம் பாபநாசம் தொடங்கி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை தாமிரபரணி நதிக்கரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.

100 க்கும் மேற்பட்ட படித்துறைகளில் பக்தர்கள் புண்ணிய நீராட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் சில குறிப்பிட்ட இடங்கள்:

பாபநாசம், கல்லிடைக்குறிச்சி, (அம்பாசமுத்திரம்) முக்கூடல், திருநெல்வேலி, அருவங்குளம், சீவலப்பேரி, முறப்பநாடு, அகரம்,(வல்லநாடு) ஆழிகுடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, குரங்கனி, ஏரல், ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், புன்னக்காயல்.
 
பாபநாசம்: தாமிரபரணி நதியின் பிறப்பிடமாகும்,அகத்தியர் அருளிய மலை வாசஸ்தலம்.

அருவங்குளம்: தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த இடம் இராமாயணத்தில் ஜடாயு உயிர் நீத்த இடம் என அழைக்கப்படுகிறது. ஏற்கனவே இவ்விடம் ஜடாயு தீர்த்தம் என புகழ் பெற்றது. இவ்விடம் திருநெல்வேலி அருகில் திருநெல்வேலி அவுட்டர் பைபாஸ் ரோட்டில் நாரணம்மாள்புரம் அருகில் உள்ளது.

சீவலப்பேரி: இந்த ஊரில் தாமிரபரணி நதியுடன் மேலும் இரண்டு ஆறுகள் இணைவதால் முக்கூடல் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இங்கே புகழ்பெற்ற துர்க்கை அம்மன் கோவிலும் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவிலும் ஆற்றுக்கு அருகிலையே அமைந்துள்ளது. இவ்விடம் திருநெல்வேலியிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

முறப்பநாடு: இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையில் புகழ்பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. மேலும் இக்கோவில் குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. இங்கே கைலாசநாதர் குருவின் அம்சமாகவே காட்சி தருகிறார். குருபெயர்ச்சிக்காக தான் இத்தாமிரபரணி புஷ்கரணி நடைபெறுவதால் இத்தலத்தின் முன்பாக உள்ள தாமிரபரணி நதிக்கரையில் நீராடி குருவையே நேரடியாக வணங்கிக்கொள்ளலாம். இவ்விடம் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும், திருநெல்வேலியிலிருந்து இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் தான் உள்ளது.

ஆழ்வார் திருநகரி: இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையில் ஆதிநாதன் திருக்கோவில் உள்ளது, நம்மாழ்வார் இங்கே தான் அவதரித்தார். இந்த கோவிலும் குரு ஸ்தலமாக தான் விளங்குகிறது. எப்படியெனில், பிரம்மாவுக்காக பெருமாள் இங்கே குருவாக அவதாரம் எடுத்தார். முறப்பநாடு குரு ஸ்தலத்திற்கும் ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலத்திற்கும் ஒரு சிறிய வேறுபாடு எனில். முறப்பநாட்டில் சிவன் கோவிலில் குரு ஸ்தலம் உள்ளது, ஆழ்வார்திருநகரியில் பெருமாள் கோவிலில் குரு ஸ்தலம் உள்ளது. இவ்விடம் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் ஸ்ரீவைகுண்டம் அடுத்து இருக்கிறது. இதுவும் தூத்துக்குடி மாவட்டத்தில் தான் இருக்கிறது. இங்கே குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் நீராட வேண்டும் என்று கட்டாயமில்லை,தாமிரபரணி நதியில் எங்கு வேண்டுமானாலும் நீராடலாம்.

நாள்: 12-10-2018 முதல் 23-10.2018 வரை தேதியில் நீராட வேண்டும் 21 தலமுறைக்கு செய்த பாவம் போகும். முடிந்தால் இந்த 12 நாட்களுமே நீராடலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 
temple news
விஷு காலம் என்பது பகல், இரவு பொழுது சம அளவாய் இருக்கும் நாள. சித்திரை மற்றும் ஐப்பசி விஷு, புண்ணிய ... மேலும்
 
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
பித்ருக்கள் எனப்படும் முன்னோர் உலகில் நமக்கு வளர்பிறை பகல் நேரமாகவும், தேய்பிறை இரவு நேரமாகவும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar