Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலீஸ்வரர் கோவில் மண்டபம் ... ஜெகதளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஹெத்தையம்மன் திருவிழா ஜெகதளாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் மண்டல மகர விளக்கு காலம் நிறைவு; நடை அடைப்பு.. 52 லட்சம் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் மண்டல மகர விளக்கு காலம் நிறைவு; நடை அடைப்பு.. 52 லட்சம் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

20 ஜன
2025
04:01

சபரிமலை; 61 நாட்கள் நடைபெற்ற மண்டல மகர விளக்கு கால சீசன் நிறைவு பெற்று சபரிமலை நடை இன்று காலை அடைக்கப்பட்டது.

சபரிமலையில் மண்டல கால பூஜைக்காக நவம்பர் 15 மாலை நடை திறக்கப்பட்டு, டிச., 26 இரவு அடைக்கப்பட்டது. மூன்று நாள் இடைவெளிக்கு பின்னர் 30 மாலை நடைதிறந்து மகர விளக்கு கால சீசன் தொடங்கியது. ஜன., 14-ல் மகரஜோதி விழா நடைபெற்றது. கடந்த 18-ல் நெய் அபிஷேகம் நிறைவு பெற்றது. நேற்று மாளிகை புறம் மணிமண்டபம் முன்பு குருதி பூஜை நடைபெற்றது. இன்று காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. 6:30 - க்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி ராஜராஜ வர்மா ஸ்ரீ கோயில் முன் வந்ததும் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஐயப்பன் விக்ரகத்தில் திருநீறு பூசி தவக்கோலத்தில் அமர்த்தி நடை அடைத்தார். பின்னர் கோயில் சாவியை அவர் பந்தள மன்னர் பிரதிநிதியிடம் ஒப்படைத்து பண முடிப்பையும் கொடுத்தார். 18 படிக்கு கீழே வந்ததும் ராஜராஜ வர்மா கோயில் சாவி மற்றும் பணத்தை சபரிமலை நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைத்து வரும் காலங்களிலும் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் பந்தளம் புறப்பட்டார். இந்த மண்டல மகர விளக்கு காலம் பெரிய அளவில் புகார்கள் எதுவும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. சுமார் 52 லட்சம் பக்தர்கள் தரிசனம் நடத்தியுள்ளனர். இனி மாசி மாத பூஜை களுக்காக பிப்., 12 -ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா சிறப்பு பூஜை இன்று ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வீற்றிருக்கும் ம்ருத்யுஞ்சய சுவாமிக்கு ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித் திருவிழாவிற்காக நேற்று முகூர்த்தக்கால் ஊன்றும் விழாவில் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன் 22 ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar