பொங்கலூர் : தைப்பூசத் திருவிழாவின் இறுதி நாளான இன்று, அலகுமலை முருகன் கோவில் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. பொங்கலூர் அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோவிலில், தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 13ம் தேதி கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. கடந்த 6ம் தேதி காலை வரை சுவாமி வீதியுலா, 6ம் தேதி மாலை திருக் கல்யாண உற்சவம் நடந்தது. 7ம் தேதி இரவு தேரோட்டம் நடந்தது. விநாயகர் தேர், இரவு 10.00 மணிக்கு புறப்பட்டு, 10.45 மணிக்கு நிலைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, முருகன் தேர், இரவு 11.00 மணிக்கு புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, அதிகாலை 2.00 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் நிலை நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் மாலை பரிவேட்டை நிகழ்ச்சி, சுவாமி வீதியுலா நேற்று நடந்தது. தைப்பூசத் திருவிழாவின் இறுதி நாளான இன்று, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.