Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லைப்பிடாரி அம்மன் பீடத்தில் ஆடு ... பழவேரி மலையில் முருகன் கோவில் கட்டும் பணி தீவிரம் பழவேரி மலையில் முருகன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேசிங்கு ராஜா- பஞ்ச கல்யாணிக்கு திருமணம்; மழை வேண்டி நூதனம்!
எழுத்தின் அளவு:
தேசிங்கு ராஜா- பஞ்ச கல்யாணிக்கு திருமணம்; மழை வேண்டி நூதனம்!

பதிவு செய்த நாள்

12 அக்
2025
06:10

பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச கல்யாணிக்கு திருமணம் செய்து வைத்தனர்.‌

பல்லடத்தை அடுத்த, கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேற்கு ராகவுண்டம்பாளையம் கிராமத்தில், மழை பொழிய வேண்டி, கிராம மக்கள் நூதன வழிபாடு மேற்கொண்டனர். அங்குள்ள ராஜ விநாயகர் கோவிலில், தேசிங்கு ராஜா -பஞ்ச கல்யாணி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வைபவம்‌ கோலாகலமாக நடந்தது. 

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், கோடங்கிபாளையம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் விவசாயத் தொழில் பரவலாக நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்பாகவே துவங்க வேண்டிய பருவமழை இன்னும் வரவில்லை. நிலத்தடி நீர்மட்டம், ஆயிரம் அடிக்கு கீழ் சென்று விட்டது. எனவே, ஊர் மக்கள் ஒன்று கூடி ஆலோசித்து, முன்னோர்கள் மேற்கொண்ட பஞ்ச கல்யாணி திருமணம் செய்ய தீர்மானித்தோம். இதன்படி, அம்பல கூத்தனான தேசிங்கு ராஜாவுக்கும், வேதநாயகியான பஞ்ச கல்யாணிக்கும் ராஜ விநாயகர் கோவிலில் நேற்று (நேற்று முன் தினம்) திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று (நேற்று) தேசிங்கு ராஜாவுக்கும்- பஞ்ச கல்யாணிக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.‌ முன்னோர்கள் மேற்கொண்ட இந்த வழிபாட்டின் பயனாக மழை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.

முன்னதாக, நேற்று பட்டினி சீர், உருமால் கட்டுதல், முகூர்த்தக்கால் நடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன.‌ நேற்று காலை, 10.45 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன், மங்கல இசையுடன் தேசிங்கு ராஜா- பஞ்ச கல்யாணி அனைத்து வரப்பட்டனர். மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என, ஊர்மக்கள் சீர்வரிசை எடுத்து வர, மாலை மாற்றுதல், சிறப்பு வேள்வி வழிபாடு ஆகியவை நடந்தன. இதனை தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க தேசிங்குராஜா- பஞ்ச கல்யாணிக்கு திருமண வைபவம் நடந்தது. கூடியிருந்த பொதுமக்கள் அனைவரும் அட்சதை தூவி மணமக்களை வாழ்த்தினர். தொடர்ந்து மழைச்சோறு எடுக்கும் நிகழ்வு நடந்தது. மழை வேண்டி நடந்த இந்நிகழ்வில் ஊர்மக்கள் பலரும் உற்சாகத்துடன் பங்கேற்க, அனைவருக்கும் கல்யாண விருந்து வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar