பதிவு செய்த நாள்
18
டிச
2018
01:12
தென்னேரி: பூஜை நடத்தாமல், காந்த லிங்கேஸ்வரர் கோவில் பூட்டியே கிடக்கிறது. வாலாஜாபாத் அடுத்த, தென்னேரி கிராமத்தில் ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் காந்தலிங்கேஸ்வரர் கோவில்கள் உள்ளன. இவ்விரு கோவில்களையும், தொல்லியல் துறை பாதுகாக்கிறது. இதில், ஆபத்சகாயேஸ்வரருக்கு மட்டும், தினமும் பூஜை மற்றும் விழாக்கள் நடைபெறுகின்றன. காந்தலிங்கேஸ்வரருக்கு பூஜை நடக்காததால், பூட்டிய நிலையிலேயே கோவில் இருக்கிறது.பூஜை பயன்பாட்டிற்காக, கோவிலை திறக்க வேண்டும் என, பக்தர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, தொல்பொருள் துறை அதிகாரி, சரவணன் கூறியதாவது: இக்கோவிலுக்கு பூஜை செய்வதில்லை. இருப்பினும், காலை நேரம் சுத்தம் செய்து விட்டு, பூட்டு போடப்படுகிறது. இரு கோவில்களை ஒருவர், பாதுகாப்பதால், பூட்டு போடப்பட்டு இருக்கும். வேறு ஒருவரை நியமித்த பின், எந்த நேரமும் திறந்திருக்க ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.