ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் வில்லூண்டி தீர்த்தம் அருகில் ராமபானேஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமபானேஸ்வரர் கோயில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் வில்லூண்டி தீர்த்தம் அருகில் அமைந்துள்ளது. 300 ஆண்டுகள் பழமையானது. ஆன்மிக பெரியோர்கள் முயற்சியால் இக்கோயில் பல லட்சம் ரூபாயில்திருப்பணி செய்துபுதுப்பித்தனர்.
கோயில் முன்பு பிப்.,8 ல் முதல்கால யாகசால பூஜை, பிப்.,9ல்இரண்டாம், மூன்றாம்கால யாகசால பூஜைநடந்தது.
நேற்று (பிப்., 10ல்) 4ம் கால யாகசால பூஜை முடிந்ததும் காலை 10:00 மணிக்கு குருக்கள் புனித கலசத்தில் இருந்த நீரை கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து, மகா தீபாரதனை நடத்தினர். அப்போது அங்குகூடியிருந்த ஏராளமானபக்தர்கள் தரிசனம்செய்தனர். விழாவில் ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி பொதுசெயலர் ராமமூர்த்தி, கோயில் திருப்பணி குழு பூஜாரி முனியசாமி, கணேசன், குமார், நாகராஜன், கோவிந்தன், பலர் பங்கேற்றனர்.