பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
02:04
ஏகனாம்பேட்டை: சித்தி விநாயகர் கோவிலில் நேற்று, (ஏப்., 17ல்)கும்பாபிஷேகம் நடந்தது.வாலாஜாபாத் அடுத்த, ஏகனாம்பேட்டை கிராமத்தில், சித்தி விநாயகர் கோவில் உள்ளது.
இக்கோவில் வளாகத்தில், ஆஞ்சநேயர், அய்யப்பனுக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இக்கோவில்களை, சீரமைக்கும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.இதையடுத்து, நேற்று (ஏப்., 17ல்) காலை, 9:00 மணிக்கு, கலசப்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, காலை, 9:40 மணிக்கு,
கோபுர கலசத்திற்கு, சிவாச்சாரியார் புனித நீரை ஊற்றினர்.ஏகனாம்பேட்டை சுற்றியுள்ள பல கிராம மக்கள், கும்பாபிஷேகத்தில் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.