பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
02:07
சேலம்: சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், 108 வைணவ திவ்ய தேச பெருமாள் சுவாமிகள், சுதை சிற்பங்களாக வடித்து, லட்சுமி நரசிம்மர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடந்த, 8 மாலை, கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று முன்தினம் (ஜூலை., 10ல்) இரவு, ஸ்ரீரங்கம் பெரிய கோவில் வீணை மிராசு ஸ்ரீனிவாசன் சுவாமிகளின், ’ஏகாந்த வீணை’ வாசிப்புடன், ’சயனாதிவாசம்’ நடந்தது. நேற்று (ஜூலை., 11ல்) காலை, 8:00 மணிக்கு மேல், வானமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயர், திருக்கோவிலூர் ஸ்ரீமத் எம்பெரு மானார் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், கும்பகோணம் சக்ரபாணி பட்டாச்சாரியார் தலைமையிலானோர், கோபுர கலசங்களுக்கு புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர்.
அப்போது, கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என, கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, அவர்கள் மீது, புனித நீர் தெளிக்கப்பட்டது. மேலும், அன்னதானம் வழங்கப் பட்டது. இன்று (ஜூலை., 12ல்) காலை, 81 கலசங்களை வைத்து, பூஜை செய்து, மூலவர் பெருமாள், பரிவார மூர்த்திகளுக்கு, திருமஞ்சனம் நடக்கவுள்ளது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், 14 இரவு சத்தாபரணத்துடன், கும்பாபிஷேக விழா நிறைவடையும். தொடர்ந்து, 48 நாள், மண்டல பூஜை நடக்கவுள்ளது.
மரக்கன்று வழங்கல்: பூலாம்பட்டி, சென்னிமலையானூர் சக்தி விநாயகர், மகாமுனியப்பன் கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட் டன.